இன்றைய வானிலை நிலவரம்: சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கடற்பிராந்தியங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான காலநிலை நிலவக்கூடும். மேலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.