2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

‘ஏஹி பஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணத்தின் இறுதி நாள் இன்று…

உள்ளூர்April 28, 2026 · 4 months முன்2
‘ஏஹி பஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணத்தின் இறுதி நாள் இன்று…

“ஏஹி பஸ்ஸிகோ” (Ehi Passiko) சர்வதேச அமைதிக்கான நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும்.

இன்று நண்பகல் 12.00 மணிக்கு களனி ரஜமஹா விகாரையில் ஆரம்பமாகும் இந்த அமைதிக்கான நடைபயணம், சுதந்திர சதுக்கத்தை நோக்கி பயணிக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து, மாலை 4.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் விசேட அரச விழா நடைபெறவுள்ளது. 

இதன்போது, வணக்கத்திற்குரிய பஞ்ஞாக்கர தேரர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிடம் ஸ்ரீ மகா போதியின் கன்று ஒன்றை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார். சுதந்திர சதுக்கத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகும் நடைபயணம், கொழும்பு கங்காராம விகாரையை சென்றடைந்ததும் நிறைவு பெறவுள்ளது. 

உலகிற்கு அமைதிச் செய்தியை கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 22ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமான இந்த “ஏஹி பஸ்ஸிகோ” சர்வதேச அமைதிக்கான நடைபயணம், நேற்று யக்கலையிலிருந்து களனி ரஜமஹா விகாரை வரை வந்தடைந்தது. 

இதேவேளை, நடைபயணம் காரணமாக இன்று கொழும்பு நகரின் பல வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.