2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அமைதி நடைபயணத்தின் 5ஆம் நாள் இன்று..

உள்ளூர்April 26, 2026 · 4 months முன்1
அமைதி நடைபயணத்தின் 5ஆம் நாள் இன்று..

‘ஏஹிபஸ்ஸிகோ’ சமாதான நடைபயணத்தின் ஐந்தாவது நாள் இன்று (26) தோலங்கமுவ தேசிய பாடசாலைக்கு அருகாமையிலிருந்து ஆரம்பமானது. இன்றைய தினம் இந்த நடைபயணம் யக்கல அபேசேகரராமய வரை சென்றடையவுள்ளது.

நாளை யக்கல அபேசேகரராமயவிலிருந்து களனி ரஜமஹா விகாரை வரை நடைபயணம் தொடரவுள்ளதுடன், ஏப்ரல் 28ஆம் திகதி களனி ரஜமஹா விகாரையில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நடைபயணம் களனி விகாரையிலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்கத்தை நோக்கி நகரவுள்ளது.

அன்றைய தினம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள ‘ஏஹிபஸ்ஸிகோ’ சமாதான நடைபயணத்தின் அரச விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.