2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!

வடக்கு மாகாணத்தின் மூன்று தீவுகள் ‘பசுமை சக்தித் தீவுகளாக’ மாற்றம்!

உள்ளூர்July 16, 2026 · 4 weeks முன்1

வடக்கு மாகாணத்திலுள்ள நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளையும் ‘பசுமை சக்தித் தீவுகளாக’ (Green Energy Islands) மேம்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தத் தீவுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (HRES) திட்டங்களை மையமாக வைத்தே இந்த மேம்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எரிசக்தி அமைச்சுக்கான 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும், பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) எரிசக்தித் திட்டங்களை விரைவாக மீள ஆரம்பிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இவற்றுடன், கெரவலப்பிட்டிய – கொழும்பு துறைமுகம் மின்சாரப் பரிமாற்றக் கோடு, சம்பூர் – கப்பல்துறை மின்சாரத் திட்டங்கள் மற்றும் கூரை மேல் சூரிய சக்தித் திட்டம் போன்ற நாட்டின் முக்கிய மின்சாரத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.