பண்டிகை காலத்தில் சந்தையில் கோழி இறைச்சி தட்டுப்பாடு இல்லை

புத்தாண்டு காலத்தில் சந்தையில் எவ்வித தட்டுப்பாடுமின்றி கோழி இறைச்சியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடியால் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் அபாயம் காணப்பட்டபோதிலும், அதனை 1,250 ரூபாய் விலையில் பேணுவதற்கு திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
அதேவேளை, உலக சந்தையில் விலங்கு தீவனங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.




