2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

காயத்தால் அவதிப்பட்ட யானையின் சோகம்

உள்ளூர்May 28, 2026 · 3 months முன்2
காயத்தால் அவதிப்பட்ட யானையின் சோகம்

மதவாச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட லுனுபஹிச்சாவ கிராமத்தின் கிகிலிகே வெவ பகுதியில் உள்ள பயிர்ச்செய்கை கிணறு ஒன்றிலிருந்து யானையொன்றின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 7 அடி உயரமும், 30 வயது மதிக்கத்தக்கதுமான ஓர் ஆண் யானையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானை நீண்ட நாட்களாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக குறித்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த வலியைக் குறைத்துக்கொள்வதற்காக, இந்த யானை அடிக்கடி நீர்நிலைகளுக்குள் இறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமை போன்று வலியைக் குறைப்பதற்காக இந்த விவசாயக் கிணற்றுக்குள் இறங்கிய யானை, அங்கேயே உயிரிழந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

யானையின் உடல் பல நாட்களாக கிணற்று நீருக்குள் மூழ்கிக்கிடந்த நிலையில், அதிலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாகவே கிராம மக்கள் இதனை அவதானித்துள்ளனர்.

யானையின் மரணம் தொடர்பில் மதவாச்சி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.