2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

உள்ளூர்July 18, 2026 · 4 weeks முன்3
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானத்தின் இல்லத்தில் குறித்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.

 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் எம்.ஏ.சுமந்திரனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளின் சார்பில் த.சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார், சி.வேந்தன் மற்றும் நா.இரட்ணலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது சமகால அரசியல் நிலவரம் சிறுபான்மை கட்சிகள் இணைந்து உருவாக்கிய புதிய கூட்டு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் ,எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.