முன்னாள் ஆட்சியாளர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுகளை வைத்து அரசியல் மட்டுமே செய்தார்கள்!”

முன்னாள் அரசாங்கங்களின் தலைவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுகளை வைத்து அரசியல் செய்தார்களே தவிர, தமிழ் மக்களுக்கான எவ்வித சுதந்திரத்தையும் வழங்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷெரிப் தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச என யாராக இருந்தாலும் அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை அரசியலாகவே பார்த்தார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.




