2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

கல்வி மையங்களில் இருண்ட உண்மை : பிரதமர் அதிர்ச்சித் தகவல் !

உள்ளூர்April 8, 2026 · 4 months முன்0
கல்வி மையங்களில் இருண்ட உண்மை : பிரதமர் அதிர்ச்சித் தகவல் !

கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த விபரங்களைச் சமர்ப்பித்தார்.

2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 1,026 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் இந்தச் சம்பவங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

2015 இல் 69 சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், 2024 இல் 155 ஆகவும், 2025 இல் 159 ஆகவும் இது உயர்வடைந்துள்ளது.

இந்த வன்முறைக் கலாசாரத்தின் விளைவாக, இதுவரை 425 மாணவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகியுள்ளதுடன், ஆறு மாணவர்கள் உயிர்மாய்ப்பு செய்துகொண்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.