2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

மலையக மக்களின் குரலாக ஜனாதிபதி அலுவலகத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி!

உள்ளூர்April 2, 2026 · 5 months முன்1
மலையக மக்களின் குரலாக ஜனாதிபதி அலுவலகத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி!

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர்களான பி. திகம்பரம், வி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின் போது , மலையக மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் காணிப் பிரச்சினைகள் மற்றும் வீட்டு வசதி குறைபாடுகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு,மலையகப் பாடசாலைகளின் தரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மலையகப் பாடசாலைகளில் நிலவும் கடும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், தகுதியான தமிழ் மொழி மூல ஆசிரியர்களை விரைவாக ஆட்சேர்ப்பு செய்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்தச் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உன்னிப்பாகக் கேட்டறிந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். குறிப்பாக கல்வி மற்றும் காணி விவகாரங்களில் விசேட கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.