2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

தடுப்புக் காவலில் இருந்த சுரேஷ் சலே மருத்துவமனையில்!

உள்ளூர்June 8, 2026 · 2 months முன்2
தடுப்புக் காவலில் இருந்த சுரேஷ் சலே மருத்துவமனையில்!

பயங்கரவாதத் தடை சட்டத்தின் (PTA) கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) சுரேஷ் சலே கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் முறையற்ற நடத்தைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (6) இரவு முதல் அவர் சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்திருந்த நிலையிலேயே, இன்று அவர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுரேஷ் சலேயின் உடல்நிலை கடுமையான நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக அவரது சட்டத்தரணிகள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ச்சியாக எச்சரித்து வந்த நிலையிலும், அவர் உணவு, நீர் மற்றும் மருந்துகளை உட்கொள்ள மறுத்து வந்த நிலையிலுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.