2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

லுணுகலையில் கஞ்சாவுடன் மாணவர்கள் கைது

உள்ளூர்February 2, 2026 · 7 months முன்1
லுணுகலையில் கஞ்சாவுடன் மாணவர்கள் கைது

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் இரண்டு பாடசாலை மாணவர்கள் கஞ்சா போதைப்பொருளுடன் லுணுகலை அலகொல்கம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

லுணுகலை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (01) மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அலகொல்கமவைச் சேர்ந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது, ஒரு மாணவனிடமிருந்து 1750 மில்லி கிராமும், மற்றொருவரிடமிருந்து 1300 மில்லி கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டன.

குறித்த மாணவர்களுக்கு கஞ்சாவை விநியோகித்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1800 மில்லி கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 4850 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மூவரும் விசாரணைகளின் பின்னர், நாளை (03) பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.