வென்னப்புவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு

வென்னப்புவ பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொதுமகன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது குறித்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் மற்றுமொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, காரில் பிரவேசித்த மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதத்தால் அவர்களைத் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து மர்ம நபர்கள் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அத்துடன் உயிரிழந்தவருடன் இருந்த மற்றைய நபர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




