2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

போலாந்தில் இருந்து இலங்கை வந்த முதலாவது சுற்றுலா விமானம்

உள்ளூர்December 24, 2025 · 8 months முன்0
போலாந்தில் இருந்து இலங்கை வந்த முதலாவது சுற்றுலா விமானம்

நேற்று (23) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு போலந்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் முதலாவது விசேட விமானம் (Inaugural Flight) வந்தடைந்தது.

குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டே இவ் விமானம் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

போலந்தின் வார்சோ (Warsaw) நகரிலிருந்து நேற்று இரவு 10.10 மணியளவில் புறப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்த விமானம் ஸ்மார்ட் விங்ஸ் (Smart Wings) விமான சேவைக்குச் சொந்தமான 3Z-7648 என்ற இலக்கமுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முதற்கட்டப் பயணத்திற்காக போயிங் 737 ரக விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 180 சுற்றுலாப் பயணிகளும் 9 விமானப் பணியாளர்களும் வருகை தந்தனர்.

2026 மார்ச் 15 ஆம் திகதி வரை வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் ஒருமுறை இந்த விமான சேவை இடம்பெறவுள்ளது.

இவ்விமானம் மூலம் வருகை தரும் போலந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் பல சுற்றுலா பகுதிகளுக்குச் சுற்றுலா செல்லவுள்ளனர்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் சுற்றுலா நிறுவன அதிகாரிகள் போலந்து சுற்றுலாப் பயணிகளை உற்சாகமாக வரவேற்றனர்.