2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

வாகன இறக்குமதி நிபந்தனைகளை தளர்த்த அரசாங்கத்திடம் வேண்டுகோள்.

உள்ளூர்December 27, 2025 · 8 months முன்1
வாகன இறக்குமதி நிபந்தனைகளை தளர்த்த அரசாங்கத்திடம் வேண்டுகோள்.

சாதாரண மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சிறிய ரக வாகனங்களின் விலைகளை குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

குறைந்த எஞ்சின் கொள்ளளவு கொண்ட வாகனங்களுக்கான வரி அமைப்பில் மாற்றம் செய்யுமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 1000cc வரம்பிற்குட்பட்ட Alto, Wagon R, Yaris, Hustler போன்ற வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரிகளை குறைத்தால், நடுத்தர மற்றும் சாதாரண வர்க்க மக்களுக்கு பெரிதும் பயன் கிடைக்கும் என்றார்.

ஒரு சாதாரண Wagon R வாகனத்திற்கே சுமார் 40 இலட்சம் ரூபாய் வரி விதிக்கப்படுவதாகவும், இவை எரிபொருள் சிக்கனமான வாகனங்கள் என்பதால் இத்தகைய வாகனங்களையே ஊக்குவிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளால் வாகன விற்பனை கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளதாகக் கூறிய அவர், இதன் காரணமாக வாகன இறக்குமதி தொடர்பான நிபந்தனைகளை தளர்த்துமாறும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

அனர்த்தங்களால் மக்களின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முன்பதிவு செய்த பலர் வாகனங்களை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மூன்று மாதங்களை கடந்தால் விதிக்கப்படும் 3% அபராதத்தை, தற்போதைய அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.