2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

தென்கடலில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்: நெடுநாள் மீன்பிடிப் படகு கைப்பற்றல்

உள்ளூர்December 23, 2025 · 8 months முன்2
தென்கடலில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்: நெடுநாள் மீன்பிடிப் படகு கைப்பற்றல்

தென்கடல் பகுதியில், போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு நெடுநாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த படகு கைப்பற்றப்பட்டு, கடற்படையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகை கரைக்கு கொண்டு வரும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.