2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் இலங்கைக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்படும்

உள்ளூர்March 29, 2026 · 5 months முன்3
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் இலங்கைக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்படும்

மத்திய கிழக்கின் முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை திடீரென மூடப்பட்டால், அதனால் மிக மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரத்திற்கான கீல் நிறுவனம் 2026 மார்ச் மாதம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படும் பட்சத்தில், இலங்கையில் கடுமையான உணவுப் பாதுகாப்பு நெருக்கடி ஏற்படும் என அந்த ஆய்வு எச்சரிக்கிறது.

உணவுப் பொருட்களின் விலைகள் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.