2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

விசேட போக்குவரத்துத் திட்டம் இன்று முதல் ஆரம்பம்

உள்ளூர்April 8, 2026 · 4 months முன்2
விசேட போக்குவரத்துத் திட்டம் இன்று முதல் ஆரம்பம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மக்கள் எவ்வித இடையூறுமின்றி தமது சொந்த ஊர்களுக்குச் செல்வதை உறுதிப்படுத்தும் வகையில், விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறையில் இருக்கும்.

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்துச் சபைகள் இணைந்து நாளாந்தம் 800 மேலதிக பேருந்து பயணங்களை முன்னெடுக்கவுள்ளன.

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து விசேட தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இக்காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் சுமார் 15 இலட்சம் பயணிகள் பேருந்து மற்றும் தொடருந்து நிலையங்களுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.