2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

உள்ளூர்January 1, 2026 · 8 months முன்2
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பலவகையான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதன்படி, நேற்று புதன்கிழமை(31) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 541 கிராம் ஹெரோயின், 685 கிராம் ஐஸ், 329 கிராம் கஞ்சா, 71 கஞ்சா செடிகள், 02 மில்லிகிராம் குஷ் ரக போதைப்பொருள், 11 மில்லிகிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 536 போதை மாத்திரைகள், 42 கிலோகிராம் மதன மோதகம் மற்றும் 143 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 616 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 17 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், 618 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 07 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.