2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

மாற்றுத்திறனாளிகளுக்காக விசேட பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்

உள்ளூர்April 21, 2026 · 4 months முன்2
மாற்றுத்திறனாளிகளுக்காக விசேட பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்

மாற்றுத்திறனாளிகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட தாழ்தள (Low-floor) முன்னுரிமை பஸ் சேவை இன்று (21) முதல் மாகும்புர பல்துறை போக்குவரத்து மையத்திலிருந்து ஆரம்பிக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் 430 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த செயற்திட்டத்தின் முதற்கட்டமாக 10 குளிரூட்டப்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்கள் இலகுவாக ஏறும் வசதி மற்றும் விசேட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்த பஸ்களில் ஒரே நேரத்தில் 80 பயணிகள் பயணிக்க முடியும்.

இந்த பஸ்கள் மாகும்புரவிலிருந்து புறக்கோட்டை மற்றும் கடவத்தை வரை இயக்கப்படவுள்ளதுடன், மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட பிரதான வைத்தியசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த போக்குவரத்து சேவை அமையவுள்ளது.