2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

5% மின்சார நுகர்வோருக்கு அதிர்ச்சி: கட்டணம் 18% உயர்வு அறிவிப்பு

BREAKINGஉள்ளூர்May 9, 2026 · 3 months முன்2
5% மின்சார நுகர்வோருக்கு அதிர்ச்சி: கட்டணம் 18% உயர்வு அறிவிப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்ததாவது, இந்த காலாண்டு மற்றும் அடுத்த காலாண்டில் சுமார் ரூ.38 பில்லியன் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலையால், மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், அரசாங்கம் ரூ.15 பில்லியன் நிவாரண நிதியை வழங்க எழுத்துப்பூர்வமாக இணக்கம் தெரிவித்துள்ளதால், இந்த கட்டண திருத்தம் அனைத்து நுகர்வோரையும் பாதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மொத்த மின் நுகர்வோரில் சுமார் 5 சதவீதமானவர்களுக்கு மட்டுமே இந்த கட்டண அதிகரிப்பு பொருந்தும் எனவும், மீதமுள்ள 95 சதவீத நுகர்வோருக்கு எந்தவித தாக்கமும் இருக்காது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.