2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பாதுகாப்பு துறையில் இணக்கம் : அமெரிக்க கடற்படை தளபதி சந்திப்பு

உள்ளூர்February 20, 2026 · 6 months முன்1
பாதுகாப்பு துறையில் இணக்கம் : அமெரிக்க கடற்படை தளபதி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கப்பற்படையின் கட்டளைத்தளபதியான அட்மிரல் ஸ்டீவ் கேலர், இலங்கையின்பாதுகாப்புச் செயலாளரான (ஓய்வுபெற்ற) எயா வைஸ்மாஷல் சம்பத் துயகொன்தவை நேற்று (19) நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இறையாண்மையைப் பாதுகாத்து பிராந்தியப் பாதுகாப்பை பலப்படுத்துகின்ற வெளிப்படையான பங்காண்மையினை மீள வலியுறுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

நடைமுறை ரீதியிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் ஸ்திரத்தன்மைக்கு உதவி செய்வதற்காக கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துதல் என்பன தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 

எமது வாண்மைத்துவ படைகளுக்கிடையிலான பிணைப்புகளை பலப்படுத்துதல். நாடு கடந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக ஒருவரோடொருவர் தொடர்புகொண்டு ஒன்றிணைந்து இயங்கும் தன்மையினை மேம்படுத்துதல் மற்றும் ஒரு பாதுகாப்பான இந்து சமுத்திரத்திற்கான நீண்டகால உறுதிப்பாடு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்றன இந்த சந்திப்பின் எதிர்பார்ப்பதாக கருதப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.