2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சென்டி பே கடற்கரை குறித்து ஜனாதிபதி அவதானம்

உள்ளூர்January 8, 2026 · 7 months முன்2
சென்டி பே கடற்கரை குறித்து ஜனாதிபதி அவதானம்

திருகோணமலை, மனையாவெலி பகுதியில் காணப்படும் சென்டி பே கடற்கரையை மக்கள் தடையின்றி பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதல் மற்றும் கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான அமைச்சின் ஆலோசனை செயற்குழுவில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்றையதினம் கூட்டம் இடம்பெற்றது.

ஒலுவில் துறைமுகத்தை அண்மித்த இடங்கள் கடலரிப்புக்கு உள்ளாகும் பிரச்சினை குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

ஒலுவில் துறைமுகத்தை பயன்பாட்டிற்கு எடுக்கும் விதம் குறித்து நாரா நிறுவனத்தின் ஒத்துழைப்பை பெற்று புதிய சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு துறைசார் அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.