2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஊதியத்தை நன்கொடையாக வழங்கும் அதிகாரிகள்

உள்ளூர்December 4, 2025 · 9 months முன்2
ஊதியத்தை நன்கொடையாக வழங்கும் அதிகாரிகள்

ஊவா மாகாண சபையின் அரச அதிகாரிகள் தமது ஒருநாள் ஊதியத்தை குறித்த மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள் கட்டுமானப் பணிகளுக்கென நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளனர்.

இதற்கு மாகாண சபையின் அனைத்து அரச அதிகாரிகளும் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல தெரிவித்துள்ளார்.

இதற்கான சுற்றுநிரூபமும் வெளியிடப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் திட்வா புயல் தாக்கத்தினால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.