2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

புத்தளம் மார்க்க ரயில் சேவைகள் நாத்தாண்டிய வரை நீடிப்பு!

உள்ளூர்December 5, 2025 · 8 months முன்0
புத்தளம் மார்க்க ரயில் சேவைகள் நாத்தாண்டிய வரை நீடிப்பு!

கொச்சிக்கடைக்கும் நாத்தாண்டியவிற்கும் இடையிலான ரயில் மார்க்கத்தில் சீர்த்திருத்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, புத்தளம் மார்க்கத்தில் ரயில் சேவைகள் தற்போது நாத்தாண்டிய வரை நீடிக்கப்படும் என ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, அண்மைக் காலமாக இந்தப் பிரிவில் ரயில்கள் கொழும்பு கோட்டைக்கும் கொச்சிக்கடை ரயில் நிலையத்திற்கும் இடையில் மாத்திரமே இயக்கப்பட்டன.

சீர்த்திருத்தப் பணிகள் இப்போது நிறைவடைந்துள்ளதால், கொழும்பு கோட்டையிலிருந்து நாத்தாண்டிய வரை ரயில் சேவைகள் முழுமையாகத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.