2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

புத்தளம் ரயில் பாதை நாளை திறப்பு!

உள்ளூர்February 15, 2026 · 6 months முன்2
புத்தளம் ரயில் பாதை நாளை திறப்பு!

புத்தளம் ரயில் பாதையிலான ரயில் சேவைகள், நாளை (16) முதல் புத்தளம் ரயில் நிலையம் வரை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தப் பாதையிலான பயணிகள் ரயில் சேவைகள், பல கட்டங்களின் கீழ் நீர்கொழும்பு, கொச்சிக்கடை, நாத்தாண்டிய, குடாவெவ ஆகிய ரயில் நிலையங்கள் வரை நீடிக்கப்பட்டிருந்தன.

இறுதியாக டிசம்பர் 29ஆம் திகதி சிலாபம் ரயில் நிலையம் வரை சேவைகள் நீடிக்கப்பட்டன.

சிலாபம் மற்றும் புத்தளம் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள பத்துளுஓயா பாலத்திற்கு அருகில் ரயில் பாதை நீரில் அடித்துச் செல்லப்பட்டமை, தில்லடிய உப ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டமை, மானுவன்கம உப ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பல இடங்களில் தெதுரு ஓயாவினால் ரயில் பாதைக்குக் கீழ் பகுதி அரிப்புக்குள்ளானமை போன்ற பாரிய அனர்த்தங்கள் காரணமாகவே புத்தளம் வரையான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.