2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

புத்தளம் – பாலவி ரயில் போக்குவரத்து நாளை மீண்டும் ஆரம்பம்

உள்ளூர்January 18, 2026 · 7 months முன்1
புத்தளம் – பாலவி ரயில் போக்குவரத்து நாளை மீண்டும் ஆரம்பம்

புத்தளம் முதல் பாலவி வரையான ரயில் போக்குவரத்தை நாளை முதல் வழமைக்குக் கொண்டுவரத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 ‘டித்வா’ புயல் காரணமாக நாடு முழுவதும் பல ரயில் வீதிகள் அழிவடைந்திருந்த நிலையில், நீர்கொழும்பிலிருந்து புத்தளம் வரையான ரயில் வீதியும் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியிருந்தது.

 குறிப்பாக, சிலாபம் முதல் புத்தளம் வரையான ரயில் வீதியில், பத்துளுஓயா பாலத்திற்கு அண்மித்த பகுதியில் பாய்ந்த பெருவெள்ளம் காரணமாக 200 அடிக்கும் அதிகமான ரயில் வீதி முழுமையாகச் சேதமடைந்திருந்தது.

 மஹவெவ பகுதியில் கடுமையாகச் சேதமடைந்திருந்த இடத்தை சீரமைத்ததைத் தொடர்ந்து, கடந்த நாட்களில் சிலாபம் வரை ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த ரயில் பாதையில் சேதமடைந்திருந்த ஏனைய இடங்களைச் சீரமைக்கும் பணிகளை ரயில்வே திணைக்களத்தின் வீதி பராமரிப்புப் பிரிவின் ஊழியர்கள் கட்டம் கட்டமாக முன்னெடுத்திருந்தனர்.

 அதற்கமைய, குறித்த பராமரிப்புப் பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. எனவே, 53 நாட்களுக்குப் பின்னர் நாளை காலை பாலவி வரை அலுவலக ரயிலை இயக்குவதற்குத் தயாராக உள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.