2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

61,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டது

BREAKINGஉள்ளூர்March 31, 2026 · 5 months முன்2
61,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டது

இதுவரை விவசாயிகளிடமிருந்து 61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இதுவரை 61,449 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி 7,383 மில்லியன் ரூபா எனவும் குறிப்பிட்டார்.

இதன்கீழ், 17,690 மெட்ரிக் தொன் வெள்ளை நாட்டரிசி நெல்லும், 43,836 மெட்ரிக் தொன் சிவப்பு நாட்டரிசி நெல்லும், 160,000 கிலோகிராம் வெள்ளை சம்பாவும், 756,000 கிலோகிராம் சிவப்பு சம்பாவும், 6,276 கிலோகிராம் கீரி சம்பாவும் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், உர விநியோகத்தின்போது அரச உர நிறுவனங்கள் மட்டுமன்றி, 18 தனியார் உர நிறுவனங்களும் தற்போது கொவிஜன சேவைத் திணைக்களத்தின் ஊடாக விவசாயிகளின் சாகுபடி நிலப்பரப்பிற்கு ஏற்ப உரங்களை விநியோகித்து வருவதாகவும் அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார்.