2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 33°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

குழந்தைகள் பாதுகாப்பை பலப்படுத்த பிரதமர் வலியுறுத்தல்!

உள்ளூர்June 26, 2026 · 2 months முன்1
குழந்தைகள் பாதுகாப்பை பலப்படுத்த பிரதமர் வலியுறுத்தல்!


இலங்கை கொள்கை உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், அவற்றை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதே தற்போதைய சவாலாக உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். குழந்தை பாதுகாப்பிற்குப் பொறுப்பான பல்வேறு தரப்பினருக்கிடையிலான ஒருங்கிணைப்பை பலப்படுத்துவதன் அவசியத்தையும், குழந்தை பாதுகாப்புச் சேவைகளை வழங்குவதில் முன்னிலை உத்தியோகத்தர்களின் முக்கிய பங்கையும் அவர் வலியுறுத்தினார்.

குழந்தை பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பரிந்துரைக்கும் வழிமுறைகளில் காணப்படுகின்ற இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கு அனைத்துப் பங்குதாரர்களையும் ஒன்றிணைப்பதன் முக்கியத்துவத்தை யுனிசெப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். அத்தோடு, குழந்தைகள் துஷ்பிரயோகம் குறித்து முறைப்பாடுகளைச் செய்வதற்கும் உதவியைப் பெறுவதற்கும் தெளிவான மற்றும் அணுகக்கூடிய பொறிமுறைகளை உறுதி செய்வதன் அவசியம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, முன்களப் பணியாளர்களின் திறன்களைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவம், குறிப்பாக உளவியல்-சமூக ஆதரவு, முன்கூட்டிய கண்டறிதல், நேரடி அறிகுறிகளை இனங்காணுதல், திறம்பட செவிமடுக்கும் உத்திகள் மற்றும் தனியுரிமையைப் பாதுகாத்தல் ஆகிய துறைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. இந்த விவாதங்களில், குழந்தைகளை இணையவழி வன்முறை மற்றும் சுரண்டலிலிருந்து பாதுகாப்பதற்கான வளர்ந்து வரும் முக்கியத்துவமும், டிஜிட்டல் சூழல்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதன் தேவை ஆகிய விடயங்களை வைத்தியர் Najat Maalla M’jid அவர்கள் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி வைத்தியர் Najat Maalla M’jid, யுனிசெப் பிரதிநிதி திருமதி Emma Brigham, ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி Marc-André Franche, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.