2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளியில் பறக்க அனுமதி

உள்ளூர்December 2, 2025 · 9 months முன்3
பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளியில் பறக்க அனுமதி

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிவரும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது வான்வெளியைப் பயன்படுத்த இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் விமானப் போக்குவரத்துக்கு வான்வெளியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மனிதாபிமான காரணங்களைக் கருத்திற்கொண்டு பாகிஸ்தானுக்குத் தனது வான் எல்லையைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் இந்தக்கோரிக்கையை முன்வைத்த 4 மணி நேரத்திற்குள் இந்தியா இந்த அனுமதியை விரைவாக வழங்கியுள்ளது.

இந்த அனுமதி இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பூசல்கள் இருந்தபோதிலும், அனர்த்தத்தின் போது இலங்கைக்கு உதவுவதற்கான மனிதாபிமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.