2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சாதாரண தர மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை

உள்ளூர்February 10, 2026 · 6 months முன்2
சாதாரண தர மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – 2025 (2026) தொடர்பான மேலதிக வகுப்புகளை (Tuition Classes) நடத்துவது நாளை (11) நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடியும் வரை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.

பரீட்சை அபேட்சகர்களுக்காக மேலதிக வகுப்புகளை நடத்துதல், அந்த வகுப்புகளை வழிநடத்துதல்இ பாடரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் நடத்துதல், மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவை இதன்போது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும், பரீட்சை வினாப்பத்திரங்களில் உள்ள வினாக்களை வழங்குவதாகவோ அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகவோ போஸ்டர்கள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதும், அவற்றை வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

யாரேனும் ஒரு நபர், நிறுவனம் அல்லது தரப்பினர் இந்த உத்தரவை மீறி செயற்பட்டால், அவர்கள் சட்டத்தின் முன்னால் குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள் என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.

இந்த உத்தரவை எவரேனும் மீறினால், அது குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது இலங்கை பரீட்சைத் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும்.