jino

Aug 13, 2025

உள்ளூர்

நாட்டின் 37வது பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம் !

இலங்கையின் மூத்த துணைப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை புதிய பொலிஸ் மா அதிபராக (IGP) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நியமித்துள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்கவினால் பிரியந்த வீரசூரியவிடம் இன்று புதன்கிழமை (13) பிற்பகல் வழங்கப்பட்டது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 61 E (b) பிரிவின்படி, அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 37வது பொலிஸ் மா அதிபராக வழக்கறிஞர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp