MuSHArraf

Aug 23, 2025

உள்ளூர்

கைதுக்கு முன்னர் ரணில் வெளியிட்ட கருத்து!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்படுவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்து வௌியிட்ட குரல் பதிவொன்றை முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தற்போது வெளியிட்டுள்ளார்.

அந்த குரல் பதிவில், "நான் எப்போதும் நாட்டிற்காகவே உழைத்திருக்கிறேன். நான் தனிப்பட்ட காரணங்களுக்காக உழைத்ததில்லை.

இந்த ஆட்சியின் உண்மை இப்போது வெளிவருகிறது. எல்லா இடங்களிலும் நடைபெறும் இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை." என ரணில் தெரிவித்துள்ளார்.

ரணில் தொடர்பில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் (Akila Viraj Kariyawasam) தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp