jino
Aug 20, 2025
உள்ளூர்
யாழ் - பாடசாலைகளுக்கு விடுமுறை.
யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் (21) விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் அறிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு இவ் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ். பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சத்தியலிங்கம் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஆகியோர் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவை இன்று (20) சந்தித்து நாளைய தினம் விடுமுறை வழங்குமாறு கோரியுள்ளனர்.
இதனை ஏற்ற பிரதமர் நாளையதினம் யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All