jino
Aug 21, 2025
உள்ளூர்
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை - ஜனாதிபதி சந்திப்பு.
கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினனர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளனர்.

நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இவ் சந்திப்பானது இடம்பெற்றுள்ளது.
வருடத்திற்கு மூன்று முறை நடைபெறும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் குறித்து கர்தினால் ஆண்டகை, ஜனாதிபதிக்கு விளக்கினார்.
கத்தோலிக்க சபையில் எழுப்பப்பட்ட கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரல்ட் அந்தோணி பெரேரா மற்றும் பேரவையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All