jino
Aug 14, 2025
உள்ளூர்
ஜனாதிபதிக்கு எதிராக - ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம். #video
திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் எதிராக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பெரும் திரளான மக்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் லஹிரு வீரசேகர ஆகியோர் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே மூத்த பொலிஸ் அதிகாரியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உரையாடலின் போது, இரண்டு வாரங்களுக்கு முன்பு விவாதிக்கப்பட்ட பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வு வழங்கத் தவறியதால் போராட்டம் நடத்தப்படுவதாக வசந்த முதலிகே கூறினார்.
"எங்களுக்கு இன்று பதில் தேவை. நீங்கள் எங்களிடம் பொய் சொல்ல முடியாது. இன்று ஜனாதிபதியின் செயலாளருடன் எங்களுக்கு ஒரு கலந்துரையாடல் தேவை. பேச்சுவார்த்தைக்கான திகதியை ஜனாதிபதி முன்னர் உறுதியளித்தார். நிலைமை தாங்க முடியாத கட்டத்தை எட்டியதால், நாங்கள் இன்று வந்துவிட்டோம்," என்றும் வசந்த முதலிகே பொலிஸ் அதிகாரியுடன் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All