நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: விசாரணையை ஆரம்பிக்கிறது மனித உரிமைகள் ஆணைக்குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட மற்றும் முழுமையான விசாரணை ஒன்றை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விசாரணைக்காக நேற்று நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அதிகாரிகள் குழுவொன்று அனுப்பப்பட்ட போதிலும், அங்கு நிலவிய அமைதியற்ற சூழல் காரணமாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் சில நாட்களில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு நேரில் சென்று குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.




