2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு !

உள்ளூர்March 17, 2026 · 5 months முன்1
கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு !

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் அன்றாட நிர்வாகம் மற்றும் கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு புதிய வழிகாட்டுதல்கள்களை வெளியிட்டுள்ளது. 

அரசு மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் இந்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு: 

அனைத்து பாடசாலைகளும் வாரத்திற்கு நான்கு நாட்கள் மாத்திரமே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மறு அறிவித்தல் வரை அனைத்து புதன்கிழமைகளும் பாடசாலை விடுமுறை தினங்களாகக் கருதப்படும். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே சுயகற்றலில் ஈடுபடுவதற்குத் தேவையான கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளை வழங்க அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.