2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!

நாடளாவிய 21 நகரங்களில் மே தின உற்சாகம் – தேசிய மக்கள் சக்தி முன்னிலை!

உள்ளூர்April 30, 2026 · 4 months முன்2
நாடளாவிய 21 நகரங்களில் மே தின உற்சாகம் – தேசிய மக்கள் சக்தி முன்னிலை!

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாளை(01) மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 21 முக்கிய நகரங்களில் 21 மே தினக் கொண்டாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெறவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வுகளில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

நுவரெலியாவில் நாளை காலை நடைபெறும் மே தினக் கூட்டத்திலும், அதனைத் தொடர்ந்து பிற்பகல் மஹரகமையில் நடைபெறும் பிரதான மே தினக் கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்துகொள்வார்.