2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

தனியார் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டு-இருவர் கைது

உள்ளூர்March 1, 2026 · 6 months முன்0
தனியார் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டு-இருவர் கைது

நீண்ட காலம் செயற்படாமல் இருந்த தனியார் அனல் மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக தனியார் அனல் மின் நிலையத்தில் இடம்பெற்று வந்ததாக கூறப்படும் இத்திருட்டு தொடர்பில் உரிமையாளர் முறைப்பாடு ஒன்றினை அண்மையில் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கி இருந்தார்.

இதற்கமைய செயற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு சனிக்கிழமை(28) அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸாரை மேலதிக விசாரணைக்கு அழைத்திருந்தனர்.அத்துடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய காவலாளி உட்பட மற்றுமொரு சந்தேக நபரையும் நிந்தவூர் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

அத்துடன் கைதான சந்தேக நபர்கள் இருவரும் தடுத்து வைக்கப்ப்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதில் ஒரு சந்தேக நபர் வாயு துப்பாக்கி ஒன்றினை வைத்துக் கொண்டு குறித்த தனியார் அனல் மின் நிலையத்தில் உள்ள புறாக்களை வேட்டையாட வந்திருந்ததாக கூறி இருந்தமை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிவந்துள்ளது.

அத்துடன் சந்தேக நபர் வசம் இருந்து மீட்கப்பட்ட வாயு துப்பாக்கி குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.