2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 36°
LIVE
இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

மட்டக்களப்பு பிரதேச சபை உறுப்பினர் வீடுக்கு தீ வைப்பு

உள்ளூர்October 20, 2025 · 10 months முன்1

​மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருகாமம் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பிரதேச சபை உறுப்பினர் சி. சர்வநந்தன் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இதனால் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்ததாகவும், வீட்டின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதோடு, வீட்டு உபயோகப் பொருட்கள், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கூரையின் சில பகுதிகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என உறுப்பினர் சர்வநந்தன் குற்றம் சாட்டியுள்ளதோடு இது தொடர்பில் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார்


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்