2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

வர்த்தகர்களுக்கு எதிராக தொடரும் சட்ட நடவடிக்கை

உள்ளூர்April 16, 2026 · 4 months முன்2
வர்த்தகர்களுக்கு எதிராக தொடரும் சட்ட நடவடிக்கை

ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12ம் திகதி  வரை மேற்கொள்ளப்பட்ட சுமார் 2,000 சோதனைகளின் மூலம் 400-க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்போது 12,000-க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்தமை மற்றும் காலாவதியான உணவுகளை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சோதனைகள் எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் பண்டிகைகளை முன்னிட்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்