2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கொஹுவலா கொலைச் சம்பவம்: தேடப்பட்டு வந்த சீன இளைஞன் கைது!

உள்ளூர்April 6, 2026 · 4 months முன்2
கொஹுவலா கொலைச் சம்பவம்: தேடப்பட்டு வந்த சீன இளைஞன் கைது!

கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி கொஹுவலா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்த சீனப் பெண் ஒருவர், தனது அறைக்குள்ளேயே கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இக்கொலை தொடர்பில் சந்தேகி நபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியிருந்தனர்.

இந்நிலையில், நேற்று கொம்பனித்தெரு, ஸ்ரீமத் அனகாரிக தர்மபால மாவத்தையில் உள்ள விடுதி ஒன்றில் பதுங்கியிருந்த 26 வயதுடைய சீன இளைஞனை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து மூன்று நவீன கமராக்கள் * 280 மில்லிகிராம் “ஐஸ்” போதைப்பொருள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொஹுவலா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (06) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், கொலைக்கான காரணம் குறித்து கொஹுவலா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.