வெள்ளவத்தையில் கம்பன் விழா: தமிழ் கலாசாரத்தை முன்னிறுத்தும் சிறப்பு நிகழ்வு!

தமிழ் மக்களின் முக்கிய கலாசார மற்றும் இலக்கிய விழாவாகக் கருதப்படும் “கம்பன் விழா” நேற்று (03) பிற்பகல் வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் கலாசார, இலக்கிய மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
சிறந்த தமிழ் கவிஞரான கம்பரின் நினைவாக, அகில இலங்கை கம்பன் கழகம் 1980ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கழகம் இலக்கியம், நடனம் மற்றும் இசை ஆகிய துறைகளை மையமாகக் கொண்டு, இளைய தலைமுறையினரை கலாசார விழுமியங்கள், தேசப்பற்று மற்றும் தர்ம நெறிகளின் வழியில் வழிநடத்தும் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
கம்பன் கழகம் ஆற்றிவரும் இச்சேவையை பாராட்டி, இவ்விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.




