2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

களுமுந்தன்வெளி உதைப்பந்தாட்ட போட்டி – பிரதம அதிதியாக இரா.சாணக்கியன்.

உள்ளூர்October 27, 2025 · 10 months முன்1
களுமுந்தன்வெளி உதைப்பந்தாட்ட போட்டி – பிரதம அதிதியாக இரா.சாணக்கியன்.

களுமுந்தன்வெளி விநாயகன் விளையாட்டு கழகம் உயிர் நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் காஞ்சிக்குடா ஜெகன் விளையாட்டு கழகம் முதலிடம் பெற்றது.இரண்டாம் இடத்தை சில்லுக்கொடியாறு பராசக்தி விளையாட்டு கழகம் பெற்றுக்கொண்டது.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுமுந்தன்வெளி விநாயகன் விளையாட்டு கழகம் உயிர் நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ( 27) நேற்று களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.03 நாட்கள் இப்போட்டி இடம்பெற்றதுடன் 45 அணிகள் பங்குபற்றியதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன், படுவான்கரை உதைப்பந்தாட்ட சம்மேளத்தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது போட்டியில் முதலிடம், இரண்டாம் பெற்ற அணிகளுக்கு பதக்கங்களும், கிண்ணங்களும், காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஊடகங்களும் கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.