IRIS Bushehr இன்னும் கப்பல் கொழும்பு அருகே….

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பலை இன்னும் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (19) பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், குறித்த கப்பல் தற்போது கொழும்பிலிருந்து சுமார் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.




