2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

எரிபொருள் நெருக்கடியை தணிக்க இந்திய கப்பல் வருகை

உள்ளூர்March 29, 2026 · 5 months முன்2
எரிபொருள் நெருக்கடியை தணிக்க இந்திய கப்பல் வருகை

இந்திய அரசாங்கத்தின் விசேட ஒத்துழைப்புடன் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் கப்பல் இன்று பிற்பகல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அதன்படி, இன்று பிற்பகல் 1.30க்கு எரிபொருளை ஏற்றிய ஹரி ஆனந்த (HARI ANAND) என்ற கப்பல் துறைமுறைகத்தை வந்தடைந்ததாக துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலில் 18 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலும், 18 ஆயிரம் மெற்றிக் தொன் 92 ரக பெற்றோலும் கொண்டு வரப்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட இராஜதந்திர தொடர்புகளின் விளைவாக, லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு இந்த எரிபொருளை வழங்க இந்திய எண்ணெய் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் வெவ்வேறு நாடுகளில் இருந்து 10 எரிபொருள் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.