2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

உள்ளூர்May 18, 2026 · 3 months முன்2
பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

17ஆம் தடவையாக நாளை (19) அனுஷ்டிக்கப்படும் யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. 

தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம், நாட்டில் அமைதியை நிலைநிறுத்தவும் தாய்நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவும் அளப்பரிய தியாகங்களையும் சிறப்பான சேவையையும் ஆற்றிய முப்படை வீரர்களை கௌரவித்து நன்றி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 

முப்படைத் தளபதிகளின் பரிந்துரைகளின் பேரிலும் முப்படைகளின் நிர்வாக நடைமுறைகளுக்கு அமைவாகவும் இப்பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.