2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

புல்மோடை நகரில் சட்டவிரோத டீசல் விற்பனை: 390 லீட்டர் டீசலுடன் ஒருவர் கைது!

உள்ளூர்March 4, 2026 · 6 months முன்1
புல்மோடை நகரில் சட்டவிரோத டீசல் விற்பனை: 390 லீட்டர் டீசலுடன் ஒருவர் கைது!

புல்மோடை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில், அனுமதிப்பத்திரம் இன்றி டீசல் கையிருப்புகளைச் சேமித்து வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புல்மோடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (03) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 390 லீட்டர் டீசல் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புல்மோடை, அர்பத் நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (04) குச்சவெளி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன், புல்மோடை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.