2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று அவசரக்கூட்டம்

உள்ளூர்March 25, 2026 · 5 months முன்2
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று அவசரக்கூட்டம்

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள் காரணமாக இலங்கையின் பொதுச் சுகாதார சேவை பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ள நிலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று அவசரக் கூட்டமொன்றை நடத்தவுள்ளது.

இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் பிரபாத் சுகததாஸ பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கடமைக்குச் சமூகமளிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இன்றைய அவசரக் கூட்டத்தின் போது சுகாதார சேவையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.